tamilnadu

img

ஆதிக்க வளையத்தில் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி: அல்லாடும் நோயாளிகள்

கடந்த 2010 ஆம் ஆண்டில், மாவட்ட மக்களின் மிகுந்த  எதிர்பார்ப்புடன் முண்டியம்பாக்கம் கிராமத்தில் உதயமானது தான்  விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி. எந்த ஒரு தொழிற்சாலை களோ, திட்டங் களோ, இது மாதிரி யான மருத்துவக் கல்லுரிகளோ செயல்படுத்தும் போது அது முழு திறமையையும் வெளிப்படுத்தி மக்களிடம் குட்டுபடாமல் பேசப்பட  வேண்டும். ஆனால், அவசர கதியில்  சட்னி அரைத்த கதையாக விழுப்பு ரம் அரசு மருத்துவக் கல்லூரி அர சியல் போட்டியில் சிக்கி மேம்பாடு அடையாமல் இருந்து வந்தது. இதனையடுத்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, வாலிபர் சங்கம், மாதர் சங்கம், விவசாயிகள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புக ளும் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தின. பிறகு, புதிய புதிய கட்டி டங்கள், சிகிச்சை முறைகள் அதற்கு  ஏற்ற நவீன எந்திரங்கள் வந்த போதி லும் நோயாளிகளுக்கு அளிக்கப்ப டும் சிகிச்சையில் முன்னேற்றமும் திருப்தியும் ஏற்பட்டதாக தெரிய வில்லை.  ஏன் என்றால்? அவசர சிகிச்சைக்  காக அதிக அளவில் இங்கு வரும்  நோயாளிகள் ரெப்பர்டு புதுச்சேரி  என  அனுப்புவதால் அவசர சிகிச் சைக்கு வரும் நோயாளிகளின் உற வினர்கள் கோபமடைய செய்கி றது. சில நேரங்களில் அங்கு பணி யாற்றும் மருத்துவர், ஊழியர்களு டன் கடும் வாக்குவாதம் ஏற்படுகி றது. பின்னர், அடிதடியில் முடிந்துள்ளது.

காவல் நிலையம் வரை சென்று  முடிந்த சம்பவங்களும், அதையும் தாண்டி வழக்காக மாறிய சம்பவங்க ளும் உண்டு. இது தொடர் கதை யாக உள்ளது. இதற்கு காரணம், போலீஸ் எந்த பக்கம் நியாயம் என்ற விசாரணையே இல்லாமல் நோயாளி யோடு சேர்த்து உற வினர்களையும் ‘கேஸ்’ என்ற வார்த்தையை சொல்லி அடக்கி மிரட்டி விடுவதாக கூறுகின்றனர். அதாவது, நீதி மன்றம் ஒரு  தீர்ப்பு வழங்கியுள்ளது. மருத்துவ மனையில் தகராறு செய்வோர்  மீது  வழக்குப் பதிந்து 7 ஆண்டு வரை சிறை தண்டனை அளிக்கலாம். அந்த  வாசகத்தை இந்த மருத்துவக் கல்லூரி வளாகத்தில் திரும்பும் இடமெல்லாம் பல ஆயிரங்களை செலவு செய்து அங்கு சிகிச்சைக்கு வரும் சாதாரண ஏழை-எளிய குப்ப னையும் சுப்பனையும் மிரட்டும் வகையில் பேனர்களாக வைத்துள் ளனர். உயிரை காப்பாற்றச் சொல்லி ஆபத்தான நிலையில் வருவோரை காப்பாற்ற மருத்துவர்கள் பெரும் பாலும் முன்வருவதில்லை என்ற குற்றச்சாட்டும் பலமாக எழுகிறது. இதையும் மீறி தினந்தோறும் நூற்றுக்கணக்கான ஏழை, பாழை கள்  நம்பிக்கையுடன் வந்து செல்லு கின்றனர். காரணம்  அன்பும், கரு ணையும் நிறைந்த ஒரு சில மருத்து வர்கள் பணியாளர்கள் இருப்ப தால்தான்.
அதிகாரப் போட்டி
இந்த மருத்துவக் கல்லூரி முண்டியம்பாக்கம், சிந்தாமணி, வடகுச்சி பாளையம், அதை தாண்டி ஒரத்தூர் ஆகிய கிராமங்களை  சேர்ந்தவர்கள் தற்காலிக பணி, தனி யார் அவசர ஊர்திகள், கடைகள் வைத்து அங்கு பிழைப்பு நடத்தி வருகின்றனர். இதில் அவர்களுக் குள்ளே அவ்வப்போது ஏற்படும் அதிகார சண்டையை போலீஸ் கண்டும் காணமல் விட்டது. இதன் விளைவு, இம் மாதம் 6 ஆம் தேதி சிறிய வாய் தகராறு ஒரு உயிர் போகும் அளவுக்கு கொலையில் முடிந்தது.

ஆம்புலன்ஸ்
இந்த மருத்துவக் கல்லூரிக்கு என பல ஆம்புலன்ஸ் வாகனங்கள் இருந்தாலும், 108 அடிக்கடி வந்து செல்கிறது. அப்படி இருந்தும் தனி யார் ஆம்புலன்ஸ் ஆதிக்கம் கொடி கட்டி பறக்குது. இதற்கு மருத்து வக் கல்லூரி ஆசியும் உள்ளதாக  கூறுகிறார்கள். அவசர நோயாளி களின் உயிரை காப்பாற்றும் 108-ன்  வேகம், டீசல் சிக்கனத் திற்காக 60  கிலோ மீட்டருக்கு மேல் செல்லாத  வகையில் வைத்து உள்ளார்கள். அதனால்தான் தனியார் ஆம்பு லன்ஸ்கள் 108 யை முந்திச் செல்வ தாகவும் நோயாளிகளின் உறவி னர்கள் புகார் கூறுகின்றனர். இந்த மருத்துவக் கல்லூரி அவ சர அவசரமாக தரை இறக்கப்பட்ட விமானம் போல் இங்கு இறங்கி யது. அதனால் தான் நீண்ட கால தேவைகள் இங்கு இருக்கிறதா? என  கண்காணிப்பு செய்யப்பட வில்லை  என குற்றச்சாட்டு எழுந்து வரு கிறது. தண்ணீர் தான் முதல் தேவை.  அது பற்றாக்குறையாகவே இருக்கி றது. இந்த இடம் ஏரி என்பதால் நினைத்த இடத்தில் போர் போட்டு தண்ணீர் எடுத்து விடலாம் என்று நினைத்தனர். இதுவரை பல லட்சங்  களை செலவு செய்து 18 க்கும்  மேற்பட்ட இடங்களில் போர் போட்டும் தண்ணீர் கிடைக்காமல் மருத்துவக் கல்லூரி மாணவர்க ளும், பணியாளர்களும் அடிப்படை  தண்ணீர் தேவைக்கு திண்டாடி வருகின்றனர். இந்த நிலைமைக்கு, அருகே பல ஆண்டுகளாக இயங் கும் தனியார் கரும்பு ஆலை தான்  என்கின்றனர். இந்த பிரச்சனைகள் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வடக்கு மாவட்டச் செயலாளர் என். சுப்பிரமணியனிடம் கேட்ட போது, “இந்த மருத்துவக் கல்லூரி மருத்து வமனையில் சிகிச்சையில் அலட்சி யம், பிரசவத்தின் போது தாய் சேய்  மரணம், குடும்ப கட்டுப்பாடு சிகிச்சையில் அலட்சியம், தொட ரும் சிசு மரணங்கள் என மருத்துவர்க ளின் அலட்சிய போக்கால் தொடர்  மரணம் என ஏராளமான பிரச்சனை கள் உள்ளது” என்று பட்டிய லிட்டார். இனி வரும் காலங்களில் இது  மாதிரி நடக்காமல் மாவட்ட நிர்வாக  மும், தமிழக அரசும் விரைந்து நடவ டிக்கை எடுக்க வேண்டும் இல்லை. தொடர் போராட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளதாவும் அவர் தெரிவித்தார்.
-பாவாடை பொன்னுசாமி